சுண்டைக்காய் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்
2. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. தக்காளி - 2 எண்ணம்
5. துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. சீரகம் - 1/4 தேக்கரணடி
8. புளி - சிறிய எலுமிச்சை அளவு
9. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
10. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
11. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
12. மல்லித்தழை - சிறிது
13. எண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு
15. மோர் - 250 மி.லி.
செய்முறை:
1. பச்சை சுண்டைக்காயை ஒன்றிரண்டாக நசுக்கி, மோரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
2. சின்ன வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
3. புளியைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
4. தக்காளியை மொரமொரப்பாக அரைக்கவும்.
5. துவரம்பருப்பை வேகவைத்து மசித்து வைக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.
7. தாளிசத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
8. ஊறவைத்த சுண்டைக்காயை மோர் நீக்கிச் சேர்க்கவும்.
9. அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
10. பிறகு, அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுது, தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
11. இதனுடன் புளிக்கரைசல், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு சேர்த்து, நன்றாகக் கொதி வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.