பூண்டு-மிளகுக் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சின்ன வெங்காயம் - 100 கிராம்
2. பூண்டு - 100 கிராம்
3. மிளகு - 1/2 தேக்கரண்டி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. உளுந்து - 1/2 தேக்கரண்டி
7. தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
8. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
9. மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
10. மஞ்சள் தூள் - சிறிது
11. தக்காளி - 250 கிராம்
12. நல்லெண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு
14. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் வெறுமனே காய வைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு வெடிக்கத் துவங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பிரட்டி அதில் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறிப் பின்னர் ஆற வைக்கவும்.
4. ஆறிய பின்பு அதை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
6. தாளிசத்துடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. அத்துடன் தக்காளியையும் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
8. சில நிமிடங்கள் கழித்து இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.