பனீர் பட்டர் மசாலா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பனீர் (பாலாடைக்கட்டி) - 100 கிராம்
2. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
3. தக்காளி - 1 எண்ணம்
4. சின்ன வெங்காயம் - 15 எண்ணம்
5. பூண்டு - 3 பல்
6. இஞ்சிப்பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
7. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
8. கிராம்பு - 2 எண்ணம்
9. பட்டை - சிறு துண்டு
10. பிரியாணி இலை - சிறிது
11. வெண்ணெய் (பட்டர்) - 1 மேசைக்கரண்டி
12. எண்ணெய் - 1 தேக்கரண்டி
13. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. முந்திரிப்பருப்பை சுமார் அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துப் பின்பு, அதைத் தனியாக அரைத்து வைக்கவும்.
2. தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. பனீரைச் சிறிய அளவிலான சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
5. ஒரு கடாயில் சிறிது வெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பனீரைப் போட்டு வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
6. பின் அதே கடாயில் மீதமிருக்கும் வெண்ணெய் மற்றும் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும்ம் அதில் வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.
7. வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், அதில் இஞ்சிப்பூண்டு விழுது, கிராம்பு, பிரியாணி இலை, பட்டை, தக்காளி விழுது , உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. பின் அதில் அரைத்து வைத்திருக்கும் முந்திரி விழுது சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் வறுத்து வைத்திருக்கும் பனீர் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.