* தேங்காய் சட்னி செய்யும் பொழுது புளிக்குப் பதிலாகத் தக்காளிப் பழம் சேர்த்து அரைத்தால் சட்னி புதுவித சுவையுடன் இருக்கும்.
* மெழுகுவர்த்தியின் தேவை இல்லாத நேரங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டால் மெழுகுவர்த்தி சீக்கிரம் உருகாது.
* ஏலக்காய் விதைகளை உபயோகித்த பிறகு, அதன் தோலை டீத்தூளில் போட்டு வைத்தால் டீ தயாரிக்கும் போது தனியாக ஏலக்காய் சேர்க்கத் தேவையில்லை. டீ ஏலக்காய் மணத்துடன் இருக்கும்.
* டிஷ்யு பேப்பரைக் கொண்டு மூக்குக் கண்ணாடியைத் துடைத்தால் கண்ணாடி பளிச்சென இருக்கும்.
* அரிசியை டப்பாவில் கொட்டி வைக்கும் பொழுது, அதனுள் சிறிது சித்தரத்தையை முழுதாகப் போட்டு வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அரிசியில் வண்டு விழாது.
* பால் தயிர் ஆடையை த்தனியே எடுத்து குளிர் சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்துக் கடைந்தால் சில நிமிடங்களில் வெண்ணை உருண்டு நன்றாக வரும்.
* தோசைக்கு, இட்லிக்கு மாவு ஆட்டும்போது ஒரு வெண்டக்காய் சேர்த்து ஆட்டினால் இட்லி பூப்போல இருக்கும்.
* பாத்ரூமில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் வைத்தால் பாத்ரூம் மணம் வீசும்.
* பற்கள் மஞ்சளாக இருந்தால் எலுமிச்சை தோலுடன் சிறிது உப்பு கலந்து தேய்த்து வந்தால் பல் வெண்மையாகி விடும்.
* தேமல் உள்ள இடத்தில் பூண்டும், வெற்றிலையும் சேர்த்து அரைத்து தடவி வந்தால் தேமல் மறைந்து விடும்.
* பட்டுப் புடவையில் கறை ஏற்பட்டால் சிறிது யூக்கலிப்டஸ் தைலத்தை அந்த இடத்தில் தடவினால் கறை போய் விடும்.
* சீகைக்காயுடன் சிறிது வேப்பம்பூவையும் சேர்த்து அரைத்தால் தலைமுடி சுத்தமாவதுடன் நீண்ட நாட்கள் சீயக்காயில் பூச்சி வராது.
* சூடுபட்ட இடத்தில் சிறிது உப்புத்தூளைத் தடவினால் கொப்பளமும் போடாது, எரிச்சலும் இருக்காது.
* வெள்ளிப் பாத்திரங்களைப் பற்பசை வைத்துத் தேய்த்தால் பளபளப்பாக இருக்கும்.
* பிளாஸ்க்கில் உள்ள துர்நற்றம் அகல வினிகர் போட்டுக் கழுவலாம்.
* அடை தோசைக்கு மாவு அரைக்கும் போது ஊற வைத்த அரிசி, பருப்புடன் வேக வைத்த உருளைக்கிழங்கு இரண்டைப் போட்டு அரைத்தால் அடை ருசியாக இருக்கும்.
* பூண்டை உரிப்பதற்கு முன் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின் உரித்தால் தோல் எளிதில் கழன்று விடும்.
* பாகற்காயை சமைப்பதற்கு முன் நறுக்கிய காயில் சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து விட்டு பின்னர் கழுவி சமைத்தால் காயின் கசப்புத் தன்மை குறைவாக இருக்கும்.
* எலுமிச்சை சாறுடன் பேக்கிங் சோடாவைக் கலந்து குழாயின் மேற்புறம் உள்ள கரையைத் துடைத்தால் கரைகள் நீங்கி குழாய் பளிச்சென்று இருக்கும்.
* உருளைக்கிழங்கு வேக வைத்த நீரில் பாத்திரங்களைக் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென மின்னும்.
* இட்லி மாவு உளுந்து விழுது பற்றாக்குறையால், கல் மாதிரி இருக்கும், மாவில் 2 ஸ்பூன் நல்லெண்ணை விட்டு கலந்து பின் இட்லி வார்த்தால் மெதுவாகச் சுவையாக இருக்கும்.
* பால் இளஞ் சூடாக இருக்கும் போது உறை ஊற்றினால் தான் தயிர் நன்றாக தோயும், சுவையும் இருக்கும்.
* பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி ரவையை சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக இருக்கும்.
* தேங்காயைச் சிறுதுண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க, தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.