1. பிரியாணிக்கு வைக்கப்படும் தயிர் வெங்காயம் சேர்க்கக் கூடாது. ஏனெனில், தயிர் குளிர்ச்சி தரக்கூடியது. வெங்காயம் சூட்டை கிளப்பக் கூடியது. இந்த இரண்டு எதிர் தன்மைக் கொண்ட உணவை ஒன்றாக இணைத்து சாப்பிடுவது உடல் துன்பங்களை உண்டாக்கும்.
2. மாம்பழம், வெங்காயத்தைப் போல் சூட்டை உண்டாக்கும் பொருள். எனவே இதையும் தயிருடன் கலக்கக் கூடாது.
3. மீன், முட்டை இரண்டுமே அதிகப் புரதச்சத்து நிறைந்த உணவு. எனவே, இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்து சாப்பிடுவது தவறு. இல்லையெனில், செரிமானமின்மை, வயிற்று வலி என வயிறு உபாதைகள் உண்டாகும். அதேபோல், புரதச்சத்து மிக்க முட்டையுடன் தயிரை சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
4. பாலிலிருந்து தயிர் உருவானாலும், இரண்டையும் ஒன்று சேர சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, செரிமானமின்மை உண்டாகும்.
5. உளுந்து, தயிர் சேர்த்துச் சாப்பிடுவது செரிமானப் பிரச்சனையை உண்டாக்கும். அதோடு வாயுத்தொல்லை, வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு போன்றவை உண்டாகும்.
6. எண்ணெயுடன் வறுத்த உணவு, பொறித்த உணவு போன்றவற்றைத் தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது செரிமானத்தைக் குறைத்து உடல் உபாதைகளை உண்டாக்கும்.
7. தயிரைச் சாப்பிடச் சிறந்த நேரம் மதியவேளை தான். இரவு நேரத்தில் தயிரைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.
8. தயிருடன் பருப்பு வகைகள் சேர்த்துச் சாப்பிடவேக் கூடாது. ஏனெனில், இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.
9. முக்கியமாகத் தயிருடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
10. அதேப்போல் தயிருடன் பாலாடை சேர்த்தும் சாப்பிடக்கூடாது.