காரத் தோசை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி – 1/2 கப்
2. துவரம்பருப்பு – 1/4 கப்
3. தேங்காய் – 1/2 மூடி
4. மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
5. சீரகம் – 1/2 தேக்கரண்டி
6. மிளகு – 10 எண்ணம்
7. உப்பு – 1/2 தேக்கரண்டி
8. பெருங்காயம் – சிறு துண்டு
9. கறிவேப்பிலை – சிறிது
10. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
2. இதனுடன் தேங்காய், மிளகாய் வற்றல், சீரகம், மிளகு, பெருங்காயம், உப்பு சேர்த்து ரவை போன்று அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கலக்கவும்.(தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்)
4. கலந்த மாவுடன் மல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும்.
5. தோசைக் கல்லில் மாவை ஊற்றித் தோசை வார்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.