சிக்கன் குருமா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் – 1/2 கிலோ
2. வெங்காயம் – 2 எண்ணம்
3. இஞ்சி பூண்டுவிழுது – 1 1/2 மேசைக்கரண்டி
4. தக்காளி – 1 எண்ணம்
5. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
7. எலுமிச்சைச் சாறு – 2 மேசைக்கரண்டி
8. கறிவேப்பிலை – சிறிது
9. உப்பு – தேவையான அளவு
10. எண்ணெய் – தேவையான அளவு
அரைக்க
11. சீரகம் – 1 தேக்கரண்டி
12. சோம்பு – 1 தேக்கரண்டி
13. கசகசா – 1 தேக்கரண்டி
14. பட்டை – 1 துண்டு
15. ஏலக்காய் – 2 எண்ணம்
16. தேங்காய்த் துருவல் – 5 மேசைக்கரண்டி
17. முந்திரிப்பருப்பு – 8 எண்ணம்
18. பச்சை மிளகாய் – 4 எண்ணம்
19. மல்லித்தழை – சிறிது
20. புதினா – சிறிது.
செய்முறை:
1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
2. அதனை ஆற வைத்து, அதனுடன் முந்திரி, தேங்காய், புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
4. பின்பு, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துச் சில நிமிடம் வதக்கவும்.
5. அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துச் சில நிமிடங்கள் கிளறி விடவும்.
6. எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டுப் பிரட்டி, அதில் மூன்று கப் தண்ணீரை ஊற்றிப் பாத்திரத்தை மூடி போட்டு 20 நிமிடம் வரை வேக வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.