காடை மசாலா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. காடை – 4 எண்ணம்
2. வெங்காயம் – 2 எண்ணம்
3. தக்காளி – 2 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
6. மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
7. சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
8. மல்லித்தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
9. மிளகாய்த்தூள் – 1மேசைக்கரண்டி
10. மஞ்சள்த்தூள் – 1/4 தேக்கரண்டி
11. தயிர் – 1/4 கப்
12. தேங்காய்ப் பால் – 1/2 கப்
13. உப்பு - தேவையான அளவு
14. எண்ணெய் – தேவையான அளவு
15. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. காடையினை நன்றாக சுத்தம் செய்து மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக விரவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காயந்ததும், அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
3. பின்பு, அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தயிர், தக்காளி ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி வதங்கிய பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
5. நன்றாக வதங்கிய பின்பு பிரட்டி வைத்த காடைக் கலவையினை சேர்க்கவும். தேவையான தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
6. இதனுடன் தேங்காய் பால் ஊற்றி 15 நிமிடம் மிதமான நெருப்பில் வேக வைக்கவும்.
7. காடை மசாலா எண்ணெய் விடும் பொழுது இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.