ஆந்திரா சிக்கன் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் - 1/2 கிலோ
2. சோம்பு - 2 தேக்கரண்டி
3. பட்டை - 2 துண்டுகள்
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. ஏலக்காய் - 4 எண்ணம்
6. கிராம்பு - 4 எண்ணம்
7. பிரியாணி இலை - 1 எண்ணம்
8. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
9. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
10. சீரகப் பொடி - 1 மேசைக்கரண்டி
11. கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
12. வெங்காயம் - 1 எண்ணம்
13. இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
14. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
15. உப்பு - தேவையான அளவு
16. எண்ணெய் - தேவையான அளவு
17. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
18. மல்லித்தழை (நறுக்கியது) - சிறியது
19. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. வெங்காயத்தைச் சிறியதாக வெட்டி வைக்கவும். மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
2. முதலில் சிக்கனை நன்கு சுத்தமாகக் கழுவி, நீரை முழுவதுமாக வடித்து விடவும்.
3. பின்பு அதனுடன் அனைத்து மசாலாப் பொடிகளையும், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும்.
4. அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
5. பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
6. பின்னர் அதனை மூடி வைத்து வேக வைக்கவும்.
7. சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அத்துடன் கரம் மசாலா மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பிரட்டி, நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.