நண்டு சூப்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 1/2 கிலோ
2. வெங்காயத் தாள் - 3 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. பூண்டு - 5 பல்
6. இஞ்சி - 1 துண்டு
7. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
8. சோளமாவு - 2 தேக்கரண்டி
9. பால் - 1/4 கப்
10. வெண்ணெய் - 1 தேக்கரண்டி
11. எண்ணெய் - 1 தேக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு;.
செய்முறை:
1. மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் நண்டுத் துண்டுகளைப் போட்டுச் சிறிது நேரம் கழித்துக் கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவும்.
3. பாலில் சோளமாவைக் கரைத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் கழுவிய நண்டுகளைத் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
5. பிறகு, அதை ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
6. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
7. வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
8. கொதிக்கும் பொழுது, எடுத்து வைத்திருக்கும் நண்டு சதையைப் போட்டு, சோளமாவு கலந்த பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு இறக்கி வைக்கவும்.
9. பின்னர் அதை கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத்தாள் மேல் தாளைகப் போட்டுப் பரிமாறவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.