காடை முட்டைக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. காடை முட்டை – 25 எண்ணம்
2. சீரகம் – 1 தேக்கரண்டி
3. வெங்காயம் – 1 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
5. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
6. தக்காளி – 2 எண்ணம்
7. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
8. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
9. மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி
10. கரம்மசாலாத்தூள் – 2 தேக்கரண்டி
11. உப்பு – தேவையான அளவு
12. எண்ணெய் – தேவையான அளவு
13. கறிவேப்பிலை – சிறிது
14. மல்லித்தழை – சிறிது.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் காடை முட்டையைப் போட்டு, அதில் தேவையான தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வரை வேக வைத்து இறக்கவும்.
2. வேகவைத்த முட்டையைக் குளிர்ந்த நீரில் கழுவி, அதன் ஓட்டை உரித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சீரகம் சேர்த்துத் தாளித்து, பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
4. பிறகு, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
5. அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி விடவும்.
6. பின்பு தக்காளியை சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கி, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
7. குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள காடை முட்டையைப் போட்டு, மிதமான நெருப்பில் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
8. மேலாக, மல்லித்தழையினைத் தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.