கேரள முட்டைக் கறி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 3 எண்ணம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
4. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 3/4 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. கரம் மசாலாத் தூள் - 1/4 தேக்கரண்டி
8. தேங்காய்ப் பால் - 2 கப்
9. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
10. கடுகு-1/4 தேக்கரண்டி
11. சீரகம் - 1/4 தேக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
13. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. முட்டையை வேகவைத்துப் பாதியாக வெட்டி வைத்து கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும், நீளவாக்கில் மெலிதாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. பின் அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
5. மசாலா நன்கு கொதித்ததும், தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதி வர ஆரம்பித்ததும் நறுக்கி வைத்த முட்டையைப் போட்டு மசாலாவை இறக்கவும்.
6. மேலாக மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.