நெத்திலி மீன் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நெத்திலி மீன் – 300 கிராம்
2. மிளகாய்த் தூள் – 2 கரண்டி
3. மல்லித்தூள் – 2 கரண்டி
4. மஞ்சள் தூள் – 1/4 கரண்டி
5. கடுகு – சிறிது
6. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
7. தக்காளி – 2 எண்ணம்
8. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
9. பூண்டு – 5 பல்
10. இஞ்சி – சிறிது
11. புளி – சிறிது
12. நல்லெண்ணெய் – தேவையான அளவு
13. கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
1. நெத்திலி மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
2. புளியை நன்கு கரைத்து வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, வெந்தயம் போட்டுத் தாளித்து, வெங்காயம், நறுக்கிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
5. அதன் பிறகு, அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
7. அதன் பிறகு, அதில் புளி கரைத்த தண்ணீர் ஊற்றிச் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
8. குழம்பு ஓரளவு கெட்டியானவுடன் மீனைப் போட்டு அடுப்பை குறைந்த நெருப்பில் பத்து நிமிடம் வேகவிடவும்.
9. கடைசியாக, கருவேப்பிலை போட்டு இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.