மீன் புட்டு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முள்ளில்லாத மீன் - 300 கிராம்
2. வெங்காயம் - 5 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
5. தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
6. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
7. பட்டை - ஒன்று
8. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
9. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
10. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. மீனைச் சுத்தம் செய்து வேகவைத்து முள் நீக்கி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. அதில் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. அவை நன்கு வதங்கியதும், மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
6. அத்துடன் தேங்காய்த் துருவல், உதிர்த்து வைத்திருக்கும் மீன் சேர்த்து வதக்கவும்.
7. நன்கு வதங்கியதும், மல்லித் தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.