இறால் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. இறால் - 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் - 50 கிராம்
3. பூண்டு - 3 பல்
4. தக்காளி - 3 எண்ணம்
5. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
6. சோம்பு - 1 தேக்கரண்டி
7. பட்டை - சிறு துண்டு
8. மிளகாய்த் தூள் - 2 மேசைக்கரண்டி
9. மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
10. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
11. மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
12. சீரகம் – 1/4 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை – சிறிது
13. தேங்காய்த் துருவல் – 3 தேக்கரண்டி
14. உப்பு - தேவையான அளவு..
செய்முறை:
1. இறாலை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. தேங்காய்த் துருவல், சீரகம் ஆகியவற்றை அரைத்து வைக்கவும்.
4. சோம்பு, பட்டை ஆகியவற்றைத் தட்டி வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தட்டி வைத்த சோம்பு , பட்டை போட்டு தாளிக்கவும்.
6. தாளிசத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
7. வெங்காயம் வதங்கியதும், அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால் மீனைச் சேர்க்க வேண்டும்.
8. இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
9. கடைசியாக தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
10. சிறிது நேரம் கழித்து, அதில் தேவையான தண்ணீர், அரைத்து வைத்த தேங்காய், சீரகம் கலவையை ஊற்றிக் கொதிக்க வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.