நெத்திலி மீன் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நெத்திலி மீன் - 1/2 கிலோ
2. வெங்காயம் - 3 எண்ணம்
3. தக்காளி - 3 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 6 எண்ணம்
5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
6. மிளகாய்த் தூள் - 2 மேசைக்கரண்டி
7. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
8. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
9. புளி - பெரிய எலுமிச்சை அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு
11 கடுகு - 1/4 தேக்கரண்டி
12. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
13. கறிவேப்பிலை - சிறிது
14. மல்லித்தழை - சிறிது .
செய்முறை:
1. நெத்திலி மீனை நன்றாகச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்துக் கழுவி கொள்ள வேண்டும்.
2. புளியை நன்கு கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, வெந்தயம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
5. அதில் தக்காளி போட்டு வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. நன்கு வதங்கியதும் அதில், புளிக் கரைசலைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
7. நன்கு கொதித்ததும் சுத்தம் செய்து வைத்திருக்கும் நெத்திலி மீன்களைப் போட்டு சில நிமிடங்கள் மூடி வைத்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
8. அதில் மேலாகக் கருவேப்பிலை, மல்லித்தழையைத் தூவலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.