மீன் பிரியாணி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மீன் (முள்ளில்லாதது) – 1 கிலோ
2. பாசுமதி அரிசி – 1 கிலோ
3. தக்காளி – 300 கிராம்
4. பெரிய வெங்கயம் – 200 கிராம்
5. தயிர் – 1/2 கிண்ணம்
6. பச்சை மிளகாய் – 5 எண்ணம்
7. நெய் – 50 கிராம்
8. நல்லெண்ணெய் – 100 மி.லி
9. எலுமிச்சம்பழம் – 2 எண்ணம்
10. கரம் மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி
11. மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
12. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
13. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
14. இஞ்சி, பூண்டு விழுது – 5 தேக்கரண்டி
15. பட்டை - சிறிது
16. பிரிஞ்சி இலை – சிறிது
17. சோம்பு, கசகசா – 3 தேக்கரண்டி
18. ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி – 10 கிராம்
19. முந்திரி -10 கிராம்
20. கிஸ்மிஸ் பழம் (உலர் திராட்சை) – 20 gm
21. ஏலக்காய் – 5 எண்ணம்
22. உப்பு – தேவையான அளவு
23. கறிவேப்பிலை - சிறிது
24. புதினா - சிறிது
25. மல்லிதழை – சிறிது.
செய்முறை:
செய்து வைக்க வேண்டியவை
1. முதலில் மீனைச் சுத்தம் செய்து, பின் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாகப் பொரித்து எடுத்து முள் நீக்கிப் பிசிறி வைக்கவும்.
2. பாசுமதி அரிசியைக் கழுவிச் சிறிது நேரம் கழித்து, உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும் வடித்து சாதத்தைத் தனியாக வைக்கவும்.
3. இஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து அரைத்து வைக்கவும்.
4. சோம்பு, கசகசா இரண்டையும் சேர்த்து அரைத்து வைக்கவும்.
5. ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி வறுத்துப் பொடி செய்து வைக்கவும்.
6. நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துத் தனியாக வைக்கவும்.
மசாலா தயாரிக்க
7. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
8. பின்பு கறிவேப்பிலை, புதினா, மல்லிதழை போட்டு வதக்கி, அத்துடன் சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி, பூண்டு, பட்டை விழுது சேர்த்து வதக்கவும்.
9. அத்துடன் கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தயிர், ஜாதிக்காய் வாசனைப்பொடி போட்டு அத்துடன் பச்சைமிளகாய் தட்டி போட்டு நன்கு வதக்கவும்.
10. முந்திரி, திராட்சையைச் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடவும்.
பிரியாணி செய்திட
11. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கிய பின்பு, மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக பிசிறி விடவும்.
12. அடுத்து சாதத்தை எடுத்துக் கொஞ்சமாக பரப்பவும், சாதத்தின் மேல் சிறிது எண்ணெய் விடவும்.
13. இதேபோல் மசாலா, மீன், சாதம் அடுக்குகள் என இரு முறை செய்யவும்.
14. பின்பு பாத்திரத்தை மூடி போட்டு சிறிது நேரம் குறைவான நெருப்பில் வேக வைக்கவும்.
15. சிறிது நேரம் கழித்து பாத்திரத்தைத் திறந்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.