இறால் கருவாடு சம்பல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. இறால் கருவாடு - 1 கப்
2. தக்காளி - 1 எண்ணம்
3. சின்ன வெங்காயம் -7 எண்ணம்
4. இஞ்சி - சிறிது
5. பூண்டு - 3 பல்
6. தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
7. சோம்பு - 1/4 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
9. பட்டை - சிறிது
10. பிரியாணி இலை - சிறிது
11 கிராம்பு - 1 எண்ணம்
12. எண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. இறால் கருவாட்டைச் சுத்தம் செய்து நீர் ஊற்றி அலசிக் கொள்ளவும்.
2. தேங்காய், சோம்பு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. இஞ்சி, பூண்டு விழுதாக அரைக்கவும்.
4. தக்காளி, வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு போட்டு சிவந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
6. பின்பு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதங்கியதும் இறால் கருவாட்டைப் போட்டு வதக்கவும்.
7. அரைத்த தேங்காய் விழுது, மிளகாய்த் தூள் நீர் ஊற்றி, உப்பு போட்டுக் கொதிக்கவிட்டுக் குழம்பு பதத்தில் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.