நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நெத்திலிக் கருவாடு - 30 எண்ணம்
2. கடுகு - 1 தேக்கரண்டி
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
6. கறிவேப்பிலை - சிறிது
7. சின்ன வெங்காயம் - 15 எண்ணம்
8. தக்காளி - 2 எண்ணம்
9. மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
10. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
11. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
12. புளிச்சாறு - 3 தேக்கரண்டி
13. சிறிய மாங்காய் (கிடைக்கும் காலங்களில்) - 1 எண்ணம்
14. உப்பு - தேவையான அளவு
15. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் நெத்திலிக் கருவாடை சுடுநீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி அதன் தலையை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
3. மாங்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
4. ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
5. பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
6. அதில் மாங்காய் துண்டுகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மாங்காய் பாதியாக வெந்ததும், உப்பு, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்துக் கிளறி, புளிச்சாற்றினை ஊற்றவும்.
7. எண்ணெய் தனியாகப் பிரியும் வரை குழம்பை நன்கு கொதிக்க விடவும்.
8. பின் கருவாட்டை சேர்த்து பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.