புதினா இறால் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. இறால் - 250 கிராம்
2. புதினா - 1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது)
3. மல்லித்தழை - 1/2 கட்டு (சுத்தம் செய்தது)
4. இஞ்சி (நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி
5. வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கப்
6. பூண்டு - 5 பற்கள்
7. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
8. சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
9. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
10. தேங்காய்ப் பால் - 1 கப்
11. எலுமிச்சைச் சாறு - 2 மேசைக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. இறால் மீனை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துப் பிரட்டித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய், சீரகப்பொடி, மல்லித்தூள், இஞ்சி, பூண்டு மற்றும் 1/2 கப் வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
4. அதன் பின்பு, அரைத்து வைத்துள்ளக் கலவையை ஊற்றிச் சிறிது நேரம் கொதிக்கவிட்டு, தேங்காய்ப்பாலைச் சேர்த்து, தீயைக் குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விடவும்.
5. பின்பு ஊற வைத்துள்ள இறாலைச் சேர்த்து, ஐந்து நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.