கொத்துக்கறி குருமா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கொத்துக்கறி - 1/2 கிலோ
2. தேங்காய்த் துருவல் - 1 கப்
3. சின்ன வெங்காயம் - 1 கப்
4. இஞ்சிப்பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
5. சாம்பார் தூள் - 3 மேசைக்கரண்டி
6. சோம்பு - 1 தேக்கரண்டி
7. மல்லித்தழை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. கொத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும்.
2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தேங்காயைச் சோம்புடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
5. நன்கு வதங்கிய பின் அதனுடன் இஞ்சிப்பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் கொத்துக்கறி, மஞ்சள்தூள், சாம்பார்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. வதங்கிய பின்பு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கறியை வேக வைக்கவும்.
8. அதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காயைச் சேர்த்து ஒரு கொதி வந்தபின் மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.