ஆட்டுத் தலைக்கறிக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுத் தலை – 1 எண்ணம்
2. எண்ணெய் – 5 தேக்கரண்டி
3. பட்டை - 1 துண்டு
4. ஏலக்காய் - 2 எண்ணம்
5. கிராம்பு – 2 எண்ணம்
6. வெங்காயம் – 5 எண்ணம்
7. இஞ்சிப் பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
8. பச்சை மிளகாய் – 4 எண்ணம்
9. மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
10. மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
11. தக்காளி – 4 எண்ணம்
12. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
13. கத்திரிக்காய் – 200 கிராம்
14. தேங்காய் - 1/2 மூடி
15. மல்லித்தழை - 1/4 கட்டு
16. புதினா - 1/4 கட்டு
17. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கறிக்கடையில் ஆட்டுத்தலையைச் சுத்தம் செய்து வாங்கி வரவும்.
2. ஆட்டுத்தலையில் நிறைய எலும்புகள் இருக்கும். அதில் உள்ள நாக்கைத் தனியாக எடுத்து அதைக் கொதிக்கிற வெண்ணீரில் போட்டு தோலை பிரித்தெடுக்கவும்.
3. ஆட்டுத்தலைக் கறியைச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
4. சுத்தம் செய்து வைத்திருக்கும் ஆட்டுத்தலைக் கறியுடன் உப்பு, மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வேக வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளிக்கவும்.
6. தாளிசத்துடன் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
7. அதில் இஞ்சிப் பூண்டு விழுது போட்டு வதக்கி, மல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய் மற்றும் அனைத்துத் தூள்களையும் போட்டு வதக்கவும்.
8. பிறகு சிறிதாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்த்துக் கிளறவும்.
9. ஆட்டுத்தலைக் கறி வெந்ததும் மேலாக ஊற்றவும். பாத்திரத்தின் அடியில் எலும்பு துணுக்குகள் தங்கியிருக்கும். அதை வெளியில் எடுத்துப் போட்டு விடவும்.
10. கடைசியில் தேங்காய்ப்பால் ஊற்றிக் கொதிக்க வீட்டுக் கத்திரிகாயை நறுக்கிப் போட்டு வெந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.