ஆட்டுக்கறி - உருளைக்கிழங்கு மசாலா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக் கறி – 500 ௦௦ கிராம்
2. உருளைக்கிழங்கு – 2 எண்ணம்
3. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
4. தக்காளி – 3 எண்ணம்
5. இஞ்சிப் பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
8. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
9. சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
10. பட்டை – 1 துண்டு
11. மல்லித்தழை – 2 தேக்கரண்டி
12. எண்ணெய் – தேவையான அளவு
13. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி, மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் உருளைக்கிழங்குத் துண்டுகள் சேர்த்துச் சில நிமிடங்கள் வதக்கவும்.
5. அதனுடன் பட்டை மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
6. இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
7. அத்துடன் நறுக்கிய தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.
8. ஒரு மட்டன் துண்டுகள், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கிளறி விடவும்.
9. பாத்திரத்தை மூடி வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும்.
10. மிதமான சூட்டில் குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். அடி பிடிக்காமல் இருக்க 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கலாம்.
11. நன்கு கொதித்து வந்தவுடன் இறக்கி மல்லித்தழை தூவிவிடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.