ஈரல் வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டு ஈரல் – 250 கிராம்
2. வெங்காயம் – 3 எண்ணம்
3. தக்காளி – 2 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது – சிறிது
5. மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
6. மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
7. மல்லித்தூள் – 1/2 தேக்கரண்டி
8. கரம் மசாலாத் தூள் – 1/4 தேக்கரண்டி
9. சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
11. பட்டை – 1 துண்டு
12. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
13. மல்லித்தழை – சிறிது
14. எண்ணெய் – தேவையான அளவு
15. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. ஆட்டு ஈரலை நன்கு சுத்தம் செய்து, கழுவித் தேவையான அளவில் நறுக்கி எடுத்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைத் தனித்தனியே பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை போட்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வக்கவும்.
4. பிறகு அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி வதங்கியதும் ஈரல், அனைத்துப் பொடிகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி குறைந்த நெருப்பில் வேகவிடவும்.
6. நன்கு வெந்ததும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிச் சேர்த்து மல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.