ஆட்டுக்கறிக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி (நெஞ்செழும்பு, கொழுப்பு, ஈரல், சுவரொட்டி சேர்ந்த கறி) – 1/4 கிலோ
2. சின்ன வெங்காயம் – 100 கிராம்
3. தக்காளி – 2 எண்ணம்
4. மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
6. உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
7. பட்டை – 1 துண்டு
8. கிராம்பு – 4 எண்ணம்
9. கறிவேப்பிலை - சிறிது
10. மல்லித்தழை – சிறிது
11. உப்பு – தேவையான அளவு
12. எண்ணெய் – தேவையான அளவு
அரைக்க
13. தேங்காய் – 1/2 மூடி
14. சோம்பு – 2 தேக்கரண்டி
செய்முறை:
1. நெஞ்செழும்பு, கொழுப்பு, ஈரல் மற்றும் சுவரொட்டி கொண்ட ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. அரைக்கக் கொடுத்திருக்கும் தேங்காய், சோம்புவை விழுதாக அரைத்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளித்துப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டுக்கறி சேர்த்து நன்கு வதக்கவும்.
6. அதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய், சோம்பு விழுதைச் சேர்த்துப் பாத்திரத்தை மூடியிட்டு மிதமான நெருப்பில் வேகவிட்டு கறி வெந்ததும் இறக்கவும்.
7. இறக்கிய கறிக்குழம்பில் மேலாக கறிவேப்பிலை, மல்லித்தழை தூவிப் பரிமாறவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.