மட்டன் பிரியாணி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அரிசி – 1 கிலோ
2. மட்டன் – 1 கிலோ
3. இஞ்சி – 100 கிராம்
4. பூண்டு – 100 கிராம்
5. தக்காளி – 1/4 கிலோ
6. வெங்காயம் – 1/4 கிலோ
7. பச்சைமிளகாய் – 10 எண்ணம்
8. பட்டை – 5 துண்டு
9. இலவங்கம் – 6 எண்ணம்
10. ஏலக்காய் – 10 எண்ணம்
11. மிளகாய்த்தூள் – 1 1/2 கரண்டி
12. மல்லித்தூள் – 2 கரண்டி
13. தயிர் – 250 கிராம்
14. எலுமிச்சை – 1 எண்ணம்
15. புதினா – 1/2 கட்டு
16. மல்லித்தழை – 1/2 கட்டு
17. எண்ணெய் – 50 கிராம்
18. நெய் – 50 கிராம்
19. உப்பு – தேவையான அளவு
20. கேசரிப்பவுடர் – தேவையான அளவு.
செய்முறை:
1. இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
2. பட்டை- 3, லவங்கம்- 3, ஏலக்காய்- 5, மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை- 2, லவங்கம்-3, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சிப் பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
4. அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்குத் தேவையான உப்பு போட்டுக் கிளறவும்.
5. சில நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பொடியையும் சேர்த்துக் கிளறி விடவும்.
6. வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
7. அத்துடன் தக்காளி, புதினா, மல்லித்தழை சேர்த்துக் கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
8. முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்குத் தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டு கிளறி விடவும்.
9. சில நிமிடத்துக்குப் பின்பு, அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும், சிறு நெருப்பில் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
10. சிறிது நேரம் கழித்து மட்டன் பிரியாணியை எடுத்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.