ஆட்டுக்கறிக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி – 1/2 கிலோ (எலும்புடன் கூடிய இறைச்சி)
2. தக்காளி – 2 எண்ணம்
3. வெங்காயம் – 2 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
5. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
6. தயிர் – 1 கப்
7. கரம் மசாலா – 1 மேசைக்கரண்டி
8. சீரகம் – 1 மேசைக்கரண்டி
9. எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி
10. பட்டை - சிறிது
11. கிராம்பு – 2 எண்ணம்
12. எண்ணெய் – தேவையான அளவு
13. மல்லித்தழை – சிறிது
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஆட்டுக்கறியை நன்கு சுத்தமாகக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
2. தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கித் தனித்தனியாக விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு நெருப்பைக் குறைவாக வைத்துத் தாளிக்கவும்.
4. பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டுச் சிறிது நேரம் வதக்கவும்.
5. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, வதக்கி, தயிர், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பட்டை மற்றும் கிராம்பு பொடி, எலுமிச்சை சாறு, ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
6. அடுத்து நெருப்பைக் குறைவில் வைத்து, மட்டனைப் போட்டு, பத்து நிமிடம் வரை வதக்கி விடவும்.
7. பிறகு தண்ணீர் ஊற்றிக் குக்கரை மூடி, நெருப்பைக் குறைவாக வைத்து, 3 அல்லது 4 விசில் விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.