ஆட்டுக்கறிக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி – 1 /2 கிலோ
2. சின்ன வெங்காயம் – 20 எண்ணம்
3. தக்காளி – 2 எண்ணம்
4. பூண்டு – 10 பற்கள்
5. இஞ்சிப் பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
6. தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி
7. கசகசா – 1 தேக்கரண்டி
8. மட்டன் மசாலாத் தூள் – 2 மேசைக்கரண்டி
9. மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி
10. சோம்பு – 1 தேக்கரண்டி
11. பட்டை , ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை – சிறிது
12. கருவேப்பிலை – சிறிது
செய்முறை:
1. தேங்காய், கசகசா, சோம்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. ஆட்டுக்கறியை நன்கு கழுவிச் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலகாய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
5. பின்பு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
7. சுத்தம் செய்து வைத்துள்ள கோழிக்கறி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
8. பின்னர் அதில் மட்டன் மசாலாத் தூள், மல்லித்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
9. இதனுடன் 300 மி.லி தண்ணீர் ஊற்றித் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி மிதமான நெருப்பில் வேக வைக்கவும்.
10. கடைசியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.