முயல் கறிக்குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முயல் கறி - 1 கிlலோ
2. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. இஞ்சிப்பூண்டு விழுது - 1/2 மேசைக்கரண்டி
5. பட்டை - 1 எண்ணம்
6. கிராம்பு - 1 எண்ணம்
7. ஏலக்காய் - 1 எண்ணம்
8. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
9. மிளகாய்த்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
10. மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
11. மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி
12. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
13. கரம் மசாலாத்தூள் - 1/2 மேசைக்கரண்டி
13. உப்பு - தேவையான அளவு
14. கருவேப்பிலை - சிறிது
15. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. முதலில் முயல் கறியை நன்கு சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்துப் பிரட்டி அலசி எடுக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துப் பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் இஞ்சிப்பூண்டு விழுது, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
3. அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி வதங்கியதும், சுத்தம் செய்து வைத்திருக்கும் முயல் கறி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கறியை நன்கு வேக வைக்கவும். (கறி நன்றாக வேகவைத்தால்தான் சுவையாக இருக்கும்)
6. கறி நன்கு வெந்த பின்பு இறக்கி வைத்து மல்லித்தழை சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.