வாத்துக் கறிக்குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வாத்துக்கறி - 1 கிலோ
2. வெங்காயம் - 100 கிராம்
3. புளி- 100 கிராம்
4. பச்சை மிளகாய்- 15 எண்ணம்
5. பூண்டு- 20 பற்கள்
6. மிளகு- 2 தேக்கரண்டி
7. சீரகம் - 1 தேக்கரண்டி
8. பட்டை- 1 துண்டு
9. கிராம்பு- 5 எண்ணம்
10. பிரியாணி இலை- 2 எண்ணம்
11. தேங்காய்த் துருவல் - 5 தேக்கரண்டி
12. எண்ணைய் - தேவையான அளவு
13. உப்பு- தேவையான அளவு
செய்முறை:
1. புளியைக் கரைத்து அதில் உறித்த பூண்டு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, வாத்துக் கறி போட்டு சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
3. பச்சை மிளகாய், மிளகு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
5. வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் மிளகாய்,மிளகு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
6. அதன் பச்சை வாசனை போனதும், அதில் வாத்துக்கறியுடனான புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
7. வாணலில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும், அதில் தேங்காய்த்துருவலை வதக்கி ஆற வைக்கவும்.
8. வதங்கிய தேங்காய்த் துருவலை விழுதாக அரைத்து வைக்கவும்.
9. குழம்பில் பச்சை வாசனை போனதும், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைக் கலந்து கெட்டியானதும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.