சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வடித்த சாதம் – 2 கப்
2. புளி -எலுமிச்சம்பழ அளவு
3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
4. உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
5. கடுகு – 1/2 தேக்கரண்டி
6. உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
7. கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
8. காய்ந்த மிளகாய் - 5 எண்ணம்
9. பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
10. வேர்க்கடலைப் பருப்பு – 1 மேசைக்கரண்டி
11. நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை :
1. புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
2. அதனுடன் மஞ்சள்தூள், உப்பு, சாதம் சேர்த்துக் கலந்து அழுத்தி வையுங்கள்.
3. ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, எண்ணெயைக் காயவைத்துத் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்துப் பொன்னிறமானதும் சாதத்தில் சூடாகக் கொட்டிக் கிளறுங்கள்.
4. வேர்க்கடலையைச் சேர்க்கவும்.
5. முதல்நாள் செய்து சாதத்தில் புளியைக் கரைத்து ஊற்றி வைத்திருந்து விட்டுக் கூட, மறுநாள் இம்முறையில் தாளிக்கலாம். அருமையாக இருக்கும்.
குறிப்பு: வேர்க்கடலைக்குப் பதிலாக ஊற வைத்து, வேக வைத்தக் கொண்டைக்கடலையைக் கூடப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.