காய்கறிப் பொங்கல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1/2 கப்
2. பாசிப்பருப்பு - 1/4 கப்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. காய்கறிகள் - 1 கப்
5. பச்சை பட்டாணி - 1/2 கப்
6. இஞ்சி - 1 துண்டு
7. கறிவேப்பிலை - சிறிது
8. மிளகு - 1 தேக்கரண்டி
9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
10. ஏலக்காய் - 3 எண்ணம்
11. பட்டை - சிறிது
12. பெருங்காயத்தூள் - சிறிது
13. நெய் - சிறிது
14. எண்ணெய் - தேவையான அளவு
15. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயம், காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. இஞ்சியைத் தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும்.
3. பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
4. அரிசி, பருப்பை நீரில் கழுவி போதுமான அளவு நீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
5. ஓரளவு வெந்ததும் பெருங்காயத்தூள், நெய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம், பட்டை, மிளகு, ஏலக்காய் சேர்த்துத் தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. பின்னர் காய்கறிகளை கொட்டி, உப்பு, பச்சை பட்டாணி சேர்த்து வதக்க்கவும்.
8. காய்கறிகள் நன்கு வெந்ததும் பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.