குதிரைவாலி அரிசிப் பொங்கல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. குதிரைவாலி அரிசி - 1 கப்
2. பாசிப் பருப்பு -1/4 கப்
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு - சிறிது
6. நெய் - தேவையான அளவு
7. இஞ்சி - சிறிய துண்டு
8. கறிவேப்பிலை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. பாசிப்பருப்பை இலேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2. பின்னர் குதிரைவாலி அரிசியைக் களைந்து, வறுத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் வைத்து மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
3. குக்கர் நன்கு ஆறியவுடன், திறந்து, வெந்த குதிரைவாலி அரிசி, பருப்பு இரண்டையும் கரண்டியால் லேசாக மசிக்கவும்.
4. கெட்டியாக இருந்தால் வெந்நீர் ஊற்றித் தேவையான் அளவிற்குத் தளர்த்திக் கொள்ளவும்.
5. வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும், மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும்.
6. அதனுடன் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துப் பொங்கலுடன் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.