சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 1/4 கிலோ
2. கத்திரிக்காய் - 6 எண்ணம்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. கடுகு - 1/4 தேக்கரண்டி
5. கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
6. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
7. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
8. இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு தண்ணீர் விட்டு மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.
2. பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
3. அத்துடன் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும்.
4. கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும்.
5. அந்தக் கலவையில் சூடான சாதத்தைச் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.