மாங்காய் சாதம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் (சிறியது) - 1 எண்ணம்
2. வடித்த சோறு - 1 கப்
3. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
4. வெங்காயம் - 1 எண்ணம்
5. பூண்டு - 6 பற்கள்
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி
8. வெள்ளை உளுந்து - 1/4 தேக்கரண்டி
9. கருவேப்பிலை - சிறிது
10. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. மாங்காயை கேரட் துருவுவது போல் துருவி எடுத்து வைக்கவும்.
2. மிளகாய் வற்றலைச் சிறிது சிறிதாக கிள்ளி எடுத்து வைக்கவும்.
3. வெங்காயத்தைச் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
4. ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில், கடுகு, கடலைப் பருப்பு, வெள்ளை உளுந்து உள்ளிட்டவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
5. பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு பற்களைச் சேர்க்கவும்.
6. கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
7. வெங்காயம் வந்தங்கியவுடன், அதில் மஞ்சள் தூள் சேர்த்துத் துருவிய மாங்காயையும் சேர்க்கவும்.
8. பின்பு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
9. அடி பிடிப்பது போல் இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.
10. மாங்காயை ஏழு நிமிடங்கள் வரை வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
11. பிறகு பளப்பளப்பாக வடித்த சோறுடன் நாம் வதக்கிய மாங்காயைச் சேர்த்து கிளற வேண்டும். உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
12. புளிப்பு அதிகம் விரும்பாதவர்கள் இரண்டு மிளகாயைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு:
* இச்சாதத்திற்குக் காரமான குழம்பு எதுவாக இருப்பினும் நன்றாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.