ரவா பொங்கல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ரவை – 200 கிராம்
2. பயத்தம் பருப்பு – 100 கிராம்
3. முந்திரிப் பருப்பு – 20 எண்ணம்
4. மிளகு – 1 தேக்கரண்டி
5. சீரகம் – 1 தேக்கரண்டி
6. இஞ்சி – சிறு துண்டு
7. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
8. உப்பு - தேவையான அளவு
9. நெய் - 3 மேசைக்கரண்டி.
செய்முறை :
1. நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
2. மிளகு , சீரகம் வறுத்து இலேசாகப் பொடித்து தனியே வைக்கவும்.
3. பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
4. இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
6. பயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பாகம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
7. ஒரு வாணலியில் நெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதில் ரவையையும் கொட்டிக் கிளறுங்கள். வேண்டிய அளவு உப்பு சேருங்கள். பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.
8. ரவையுடன் பயத்தம் பருப்பைச் சேர்த்துக் கிளறி விடவும்.
9. அத்துடன் ஏற்கனவே கொதிக்க வைத்திருக்கும் நீரையும் சேர்த்து ஊற்றிக் கெட்டிப்படாமல் நன்றாகக் கிளறி விடவும்.
10. அதன் பிறகு அதில் மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
11. கடைசியாகக் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.