ரவா பொங்கல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ரவை – 1 கப்
2. பாசிப்பருப்பு – 1/2 கப்
3. மிளகு – 1 தேக்கரண்டி
4. சீரகம் – 1 தேக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு – 10 எண்ணம்
6. நெய் – 3 தேக்கரண்டி
7. இஞ்சி – சிறிது
8. பெருங்காயத்தூள் – சிறிது
9. உப்பு – தேவையான அளவு
10. கறிவேப்பிலை -சிறிது.
செய்முறை :
1. பாசிப்பருப்பை வேக வைத்து எடுக்கவும்.
2. ஒரு கடாயில் சிறிது நெய் விட்டுச் சூடானதும் ரவை சேர்த்து கிளறவும். ரவை பொன்னிறமாக வந்ததும், எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
3. பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
4. நன்கு கொதித்ததும் வேகவைத்த பாசிப் பருப்பு சேர்த்துக் கிளறவும்.
5. பின் அதில் வறுத்து வைத்த ரவை சேர்த்து, கெட்டிப்படாமல் பொங்கலாகக் கிளறவும்.
6. ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டுச் சூடானதும், அதில் கருவேப்பிலை, சீரகம், மிளகு, இஞ்சி சேர்த்து வதக்கி, அதில் பெருங்காயத்தூள் சேர்த்து, அதைப் பொங்கலுடன் சேர்த்துக் கிளறவும்.
7. பின் அதே வாணலியில் மீதமுள்ள நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பு போட்டு வறுத்துப் பொங்கலுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.