நெய்சாதம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி - 1 கப்
2. நெய் - 2 மேசைகரண்டி
3. பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
4. வெங்காயம் - 1 எண்ணம்
5. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
6. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
7. முந்திரிப்பருப்பு - 7 எண்ணம்
8. உலர் திராட்சை - 7 எண்ணம்
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. பாசுமதி அரிசியை அலசி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின் தண்ணீரை நன்றாக வடித்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
3. குக்கரில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும்.
4. அத்துடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. பின் அதில் அரிசி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
6. முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வதக்கி அலங்கரித்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.