சர்க்கரைப் பொங்கல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 350 கிராம்
2. வெல்லம் - 400 கிராம்
3. நெய் - 50 மி.லி
4. வறுத்த முந்திரி -15 எண்ணம்
5. உலர்ந்த திராட்சை -15 எண்ணம்
6. ஏலப்பொடி - சிறிது
7. பச்சைக்கற்பூரம் -1 சிட்டிகை
8. பால் - 200 மி.லி
செய்முறை :
1. தேவையான அளவு தண்ணீருடன் பாலை கொதிக்கவிடவும்.
2. கொதி வந்தவுடன் அரிசியைப் போடவும்.
3. சாதம் நன்கு குழைய வெந்தவுடன்,வெல்லத்தைப் பொடித்து போடவும்.
4. பின் ஏலக்காய் தூளுடன்,திராட்சையை நெய்யில் வறுத்து போடவும்.
5. அடுத்து வறுத்த முந்திரி, பச்சைக்கற்பூரம், மீதமுள்ள நெய் அனைத்தையும் கொட்டி நன்றாகக் கலக்கவும்.
குறிப்பு:
1. குக்கரில் வைத்தால் 1 பங்கு அரிசிக்கு 4 பங்கு பால் /தண்ணீர் வைத்து, வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கி விடலாம்.
2. வெல்லத்தைப் பொடித்துத் தண்ணீர் விட்டுக் கொதி வந்தவுடன் வடிகட்டிப் பாகாகக் காய்ச்சி, வேகவைத்த பொங்கலுடன் கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.