தக்காளி பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. துவரம்பருப்பு - 1/4 கப்
2. சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
3. தக்காளி (பழுத்தது) - 4 எண்ணம்
4. சின்ன வெங்காயம் - 50 கிராம்
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. கறிவேப்பிலை - சிறிது
7. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
8. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
9. மல்லித்தழை - சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
13. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
14. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. தக்காளி, வெங்காயம், ஆகியவற்றைச் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
2. பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.
3. துவரம் பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக அவித்துக் கொள்ளவும்.
4. பிறகு அதில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றுடன் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
6. வேகவைத்த பருப்பு, தக்காளிக் கலவையில் தாளிசத்தைச் சேர்க்கவும்.
7. சிறிது நேரம் வேகவிட்டுப் பின்னர் அதில் நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.