திருநெல்வேலி அவியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்காய் - 1 எண்ணம்
2. வாழைக்காய் - 1 எண்ணம்
3. உருளைக்கிழங்கு - 1 எண்ணம்
4. கேரட் - 1 எண்ணம்
5. மாங்காய் - 3 துண்டுகள்
6. தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. கறிவேப்பில்லை - சிறிது
அரைக்க
9. தேங்காய்த் துருவல் - 5 மேசைக்கரண்டி
10. சின்ன வெங்காயம் - 6 எண்ணம்
11. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
12. சீரகம் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. காய் அனைத்தையும் நறுக்கி தண்ணீரில் உப்பு சேர்த்து வேக விடவும்.
2. காய் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
3. அரைக்கக் கொடுத்தவற்றை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் அரைத்த விழுதைச் சிறிது தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. பின்னர் வேக வைத்த காய்களைச் சேர்த்துக் கட்டியானதும் இறக்கி விடவும்.
6. இறக்கிய பின்னர் தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்துக் கிளறி விடவும்.
குறிப்பு
* மாங்காய் கிடைக்கவில்லையெனில், சிறிது புளியை ஊற வைத்து கரைத்துச் சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.