மாங்காய் பச்சடி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் - 1 எண்ணம்
2. சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி
3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
4. சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
அரைக்க:
6. தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
தாளிக்க:
7. நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. வெங்காயம் - 1/4 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. முதலில் மாங்காயைத் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. அடுப்பில் கடாயை வைத்து மாங்காய் துண்டுகள் மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
3. நன்கு வெந்தவுடன் மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
4. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, நெருப்பைக் குறைவாக வைத்துக் கெட்டியாகும் வரை வைத்திருக்கவும்.
5. கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாக கலக்கி, அடுப்பை அணைத்து பச்சடியைப் பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
6. அடுப்பில் அதே கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு சேர்த்து, கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. வெங்காயம் பொன்னிறமானதும் பச்சடியில் ஊற்றிக் கலக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.