பட்டாணி முட்டைகோஸ் பொரியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முட்டை கோஸ் - 100 கிராம்
2. பச்சைப் பட்டாணி - 100 கிராம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
9. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
10. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
12. கறிவேப்பிலை - சிறிது
13. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. முட்டைக்கோஸ், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் பட்டாணியை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
3. கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பைக் குறைத்து வைத்து 15 நிமிடம் வைக்கவும்.
4. பட்டாணி வெந்ததும், தண்ணீரை வடித்துத் தனியே வைக்கவும்.
5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. தக்காளி நன்கு வதங்கியதும் முட்டைக்கோஸ் சேர்த்துக் கிளறி அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.
8. முட்டைகோஸ் நன்கு வெந்ததும் அதனுடன் உப்பு, அவித்து வைத்துள்ள பட்டாணி சேர்த்துக் கிளறவும்.
9. அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.
10. பிறகு தேங்காய் துருவல், மல்லித்தழை சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.