சௌசௌ கூட்டு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சௌசௌ (துண்டுகள்) - 1கப்
2. பாசிப்பருப்பு - 1 / 4 கப்
3. பச்சைமிளகாய் - 2 எண்ணம்
4. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
5. உளுத்தம்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
6. தேங்காய்துருவல் - 1 மேசைக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1 / 4 தேக்கரண்டி
8. பெருங்காயத்தூள் - 1 / 4 தேக்கரண்டி
9. கடுகு - 1 / 4 தேக்கரண்டி
10. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
11. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
13. கருவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
2. பாசிப்பருப்பு முக்கால் பங்கு வெந்தவுடன், நறுக்கி வைத்துள்ள சௌசௌ, உப்பு போட்டு வேக விடவும்.
3. தேங்காய், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, காயுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
4. கடைசியாகப் பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டுத் தாளித்துக் காயுடன் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.