பனீர் பட்டர் மசாலா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பனீர் – 1/4 கிலோ
2. பச்சைப் பட்டாணி – 200 கிராம்
3. பெரிய வெங்காயம் – 200 கிராம்
4. தக்காளி – 200 கிராம்
5. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
6. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
7. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
8. சீரகம் – 1/2 தேக்கரண்டி
9. மல்லித்தழை – 50 கிராம்
10. வெண்ணெய் – 100 கிராம்
11. மல்லித் தூள் – 3 தேக்கரண்டி
12. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
13. முந்திரிப் பருப்பு – 100 கிராம்
14. எண்ணெய் – தேவையான அளவு
15. உப்பு தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியைப் பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம் போட வேண்டும். அது வெடித்ததும், நறுக்கி வைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
3. பின்னர் அதில் இஞ்சிப் பூண்டு விழுதைச் சேர்த்து வதங்கியதும், நறுக்கி வைத்த தக்காளியைப் போட்டு வதக்கவும்.
4. அத்துடன் மல்லித் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பனீர், பச்சைப் பட்டாணி என அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
6. நன்றாக வெந்ததும், வெண்ணெய், முந்திரிப் பருப்பு சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.