குடை மிளகாய் பருப்பு உசிலி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. குடை மிளகாய் - 5 எண்ணம்
2. துவரம் பருப்பு - 200 கிராம்
3. கடலைப் பருப்பு - 50 கிராம்
4. மிளகாய் வற்றல் - 8 எண்ணம்
5. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
7. கடுகு - 1தேக்கரண்டி
8. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. குடை மிளகாயை விதை நீக்கி, சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ஊற வைத்த பருப்புகளைத் தண்ணீர் நீக்கி, அதனுடன் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளித்தவுடன் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
5. அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து உதிரியாக வரும் வரை கிளறி இறக்கவும்.
குறிப்பு: இந்த பருப்பு உசிலி, மோர் குழம்புடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.