குழிப் பணியாரம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி -1 கப்
2. புழுங்கலரிசி -1 கப்
3. உளுந்தம் பருப்பு - 1 மேஜைக் கரண்டி
4. தேங்காய் - பாதியளவு
5. வெந்தயம் - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக நனைய வைத்து இரவில் தோசை மாவு போல் ஆட்டி உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும்.
2. காலையில் தேங்காய்ப்பூ கலந்து குழிப்பனியாரச் சட்டியில் ஊற்றி எடுக்கவும்.
குறிப்புகள்:
1. மாவில் வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் வெட்டிப் போட்டுக் காரப்பனியாரமாகவும் சுடலாம்.
2. இனிப்புப் பனியாரமாக சுட விரும்புபவர்கள் கருப்பட்டி கலந்தும் சுடலாம்...! சாப்பிடலாம்...!!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.