பட்டானி சூப்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பட்டானி (வேக வைத்தது) - 1/2 கோப்பை
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 1எண்ணம்
5. இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 கரண்டி
7. மிளகுத்தூள் - 1/2 கரண்டி
8. சீரகத்தூள் - 1/2 கரண்டி
9. சேமியா - 1/2 கோப்பை
10. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. அதன் பின்பு அத்துடன் தக்காளி, இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. அதனுடன் வேகவைத்த பட்டானி சேர்த்து நன்கு வதக்கவும்.
5. மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் ஆகியவற்றுடன் உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
6. அதனுடன் 3 கோப்பையளவு தண்ணீர் சேர்க்கவும்.
7. கொதித்ததும் சேமியாவை அதில் சேர்க்கவும்.
8. சேமியா வெந்து மேலே வரவும் அதைக் கீழே இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.