பப்பாளிப்பழக் கேசரி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ரவா - 1 கப்
2. பப்பாளிப்பழத் துண்டுகள் - 2 கப்
3. சர்க்கரை - 1 கப்
4. நெய் - 6 மேசைக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
6. உலர் திராட்சை - 10 எண்ணம்
7. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி நெய்யை விட்டு, அதில் ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. அதே வாணலியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. பப்பாளி பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
4. அடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும்.
5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பைச் சிறு தீயில் வைத்து, ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும்.
6. ரவை எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்து கெட்டியானதும், அதில் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள் பப்பாளிப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
7. மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறி, கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.