அவல் உருண்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சிவப்பு கைக்குத்தல் அவல் - 1 கப்
2. தேங்காய்த் துண்டுகள் (பற்களாக) - 1 தேக்கரண்டி
3. ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
4. வெல்லம் - 150 கிராம்
5. வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
6. நெய் - 50 கிராம்
7. தேங்காயெண்ணெய் - 50 கிராம்.
செய்முறை:
1. நெய் சிறிது ஊற்றி அதில் தேங்காய்த் துண்டுகளை வதக்கி எடுத்து வைக்கவும்.
2. நெய், தேங்காயெண்ணெயை ஒன்றுசேர்த்து வாணலியில் ஊற்றிச் சூடாக்கவும்.
3. அதில் சுத்தம் செய்த அவலைச் சேர்த்து, நன்கு பொரித்து எடுக்கவும்.
4. ஏலக்காய்த்தூள், வதக்கிய தேங்காயை பொரித்த அவலுடன் கலந்து, வெண்ணெய் சேர்க்கவும்.
5. வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும்.
6. பாகை அவல் கலவையில் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.